புதுச்சேரி,-'சிக்னல்களில் விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என எஸ்.பி., மாறன் பேசினார்.புதுச்சேரி போக்குவரத்து சிக்னல்களில் பணியாற்றும் போக்குவரத்து போலீசாருக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நேற்று நடந்தது.இதற்காக, கடற்கரை சாலையில் திரண்ட போலீசார், போக்குவரத்து சமிக்ஞைகள் குறித்து புத்தாக்க பயிற்சி பெற்றனர். இதனை ஆய்வு செய்த எஸ்.பி., மாறன் போக்குவரத்து போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.பின், எஸ்.பி.,மாறன் பேசியதாவது:சிக்னல்களில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. எனவே, சிக்னல்களில் போக்குவரத்து போலீசார் கவனமாக பணியாற்ற வேண்டும். பொதுமக்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும்.சிக்னல்களில் மொபைல்போனில் பேசிக்கொண்டு இருப்பதை அறவே தவிர்க்க வேண்டும். சிக்னல்களில் சகட்டுமேனிக்கு வாகன ஓட்டிகள் கடக்கின்றனர். இது, சாலை விபத்திற்கு வழிவகுக்கின்றன.எனவே, சிக்னல்களில் விதிமுறை மீறல்களின் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.போக்குவரத்து போலீசாருக்கு இருவாரத்திற்கு ஒரு முறை இதேபோல் தொடர்ந்து புத்தாக்க பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE