பாகூர்-கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பாகூர் அடுத்த சேலியமேடு புதுத் தெருவை சேர்ந்தவர் சேகர், 48; இவரது மனைவி ரேவதி 40; இவர்கள் இருவரும் கூலி வேலை செய்கின்றனர். மது பழக்கம் காரண மாக சேகர், கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால், அவரது மனைவி ரேவதி, அவரை கண்டித்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம், ரேவதி வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அன்று மாலை திரும்பி வந்து பார்த்தபோது, சேகர் துாக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன், அவரை மீட்டு கரிக்கலாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE