மதுரை : மதுரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மாணவர் விடுதிகளில் 21 பகுதிநேர துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாதம் ரூ.3 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இப்பணியிடங்கள் இனச்சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படும்.
தகுதியுள்ளவர்கள் விண்ணப்பக்கலாம். தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். 1.7.2022ல் வயது எஸ்.சி., எஸ்.டி., பிரிவுக்கு 18 முதல் 25, பி.சி., பி.சி.எம்., எம்.பி.சி., டி.என்.சி., பிரிவினருக்கு 32, இதர பிரிவினருக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.விருப்பமுள்ளவர்கள் மாதி படிவம் தயார் செய்து உரிய சான்றுகளுடன், சமீபத்தில் எடுத்த போட்டோவையும் இணைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், மதுரை-- - 20 என்ற முகவரிக்கு மே 30க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் அனீஷசேகர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE