கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த அக்கொண்டப்பள்ளியை சேர்ந்தவர் அம்சகிரியப்பா, 36; கூலித்தொழிலாளி; இவரும், அப்பகுதியை சேர்ந்த சீனப்பா, 60, என்பவரது குடும்பத்தினரும், அருகருகே வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை, அம்சகிரியப்பா தன் வீட்டின் முன், கொட்டகை அமைப்பதற்காக தென்னை ஓலை தட்டிகளை கொட்டி வைத்திருந்தார்.
அப்போது, அவ்வழியாக காரில் சென்ற சீனப்பா மகன் பிரகாஷ், 28, அதன் மீது காரை ஏற்றினார். இதனால் அம்சகிரியப்பா கேள்வி கேட்டதால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது தந்தை சீனப்பா ஆகியோர், அம்சகிரியப்பாவை கை மற்றும் கல்லால் தாக்கினர்.
இதில் காயமடைந்த அவர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகார்படி, பிரகாஷ் மற்றும் சீனப்பா மீது, சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், தன்னை தாக்கியதாக பிரகாஷ் கொடுத்த புகார்படி, அம்சகிரியப்பா, 36, மற்றும் நாராயணப்பா, 50, நவீன்குமார், 25, ஆகிய மூன்று பேர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE