கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதிய மழையின்றி, கே.ஆர்.பி., அணைக்கு கடந்த நான்கு மாதங்களில் மூன்று முறை நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வந்தது. கடந்த, 1ல் அணைக்கு நீர்வரத்து, 12 கன அடியாக குறைந்த நிலையில், அணையின் நீர்மட்டம், 42.65 அடியாக இருந்தது. மாவட்டத்தில் கடந்த, 2 முதல், 10 வரை மாலையில் அவ்வப்போது பரவலாக பெய்த மழையால், கே.ஆர்.பி., அணைக்கு கடந்த, 8ல், 484 கன அடியாக
நீர்வரத்து இருந்தது.
மேலும் மூன்று நாள் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, 640 கன அடி நீர் தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டதால், நேற்று முன்தினம் கே.ஆர்.பி., அணைக்கு, 531 கன அடியாக நீர்வரத்து இருந்தது. கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் போதிய அளவிற்கு மழை இல்லாததால், நேற்று கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து, 279 கன அடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில், நேற்று, 47.15 அடிக்கு தண்ணீர் இருப்பு இருந்தது. அணையில் இருந்து, 12 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE