தென்மேற்கு பருவ மழை துவங்கும் நிலையில், கரூர் நகரப்பகுதிகளில் மழைநீர் புகுவதை தடுக்க, இரட்டை வாய்க்காலை துார்வார வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் நகரின் துயரம் என, அழைக்கப்படும் இரட்டை வாய்க்காலில், சாக்கடை கழிவுநீர் செல்கிறது. நகரின் முக்கிய பகுதிகள் வழியாக செல்லும், இரட்டை வாய்க்காலில் பல இடங்களில் மரம், செடி, கொடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இதனால், கொசு உற்பத்தி அதிகரித்து, பொதுமக்கள் தற்போது அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தென்மேற்கு பருவ மழை துவங்கும் நிலையில், கரூர் நகரப்பகுதி களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால், இரட்டை வாய்க்காலில் செல்லும் சாக்கடை கழிவு
நீருடன், மழைநீரும் சேர்ந்து செல்கிறது. தென்மேற்கு
பருவமழை தீவிரம் காட்டும் நிலையில், இரட்டை வாய்க்காலில் முளைத்துள்ள மரங்கள், செடிகளால் கழிவுநீர், மழை செல்லாமல் பல இடங்களில் தேங்கி, சாலையில் ஓடும் அபாயம் ஏற்படும். குடியிருப்பு பகுதிகளிலும், தண்ணீர் தேங்கி நிற்கும். குறிப்பாக, கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், கரூர் நகரில் பல இடங்களில் தண்ணீர் நின்றது.
அப்போது, பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். எனவே, தென் மேற்கு பருவமழை தீவிரம் காட்டும் முன், இரட்டை வாய்க்காலில் உள்ள மரங்கள், செடிகளை அகற்றி விட்டு, துார் வார, கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE