மயிலாடுதுறை: சீர்காழி அருகே ஊராட்சி கணக்கு பதிவேடுகளை பராமரிக்காததால் ஊராட்சி செயலாளரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சி மற்றும் கட்டுமான பணிகளை நேற்று மயிலாடுதுறை கலெக்டர் லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து கலெக்டர் லலிதா புளியந்துறை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று பதிவேடுகளை ஆய்வு செய்தார். அப்போது ஊராட்சி கணக்கு பதிவேடுகள் மற்றும் ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வில்லை என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் சண்முகம்.45. என்பவரை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement