பெரம்பலுார்: பெரம்பலுார் சர்க்கரை ஆலையில், 10 ஆண்டுக்கு பின், 2021--22ம் ஆண்டு, 3.14 லட்சம் டன் கரும்பு அரவை செய்து, சாதனை படைத்துள்ளனர்.
பெரம்பலுார் சர்க்கரை ஆலையில், 2021--22ம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பருவத்தில், பெரம்பலுார், அரியலுார், கள்ளக்குறிச்சி மற்றும் கடலுார் மாவட்டங்களில் இருந்து, 10 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்டிருந்த, 3 லட்சம் டன் கரும்பு அரவை செய்து, 2.85 லட்சம் குவிண்டால் சர்க்கரை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. 2021--22ம் ஆண்டுக்கான அரவை பருவம் நேற்றுடன் (மே 13) முடிவடைந்தது.
பெரம்பலுார் சர்க்கரை ஆலை வரலாற்றில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத இலக்கை மிஞ்சிய சாதனையாக, அரவை பருவத்தின் முடிவில், 3.14 லட்சம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளது. மேலும், சர்க்கரைக் கட்டுமானம் அளவு 9.5 சதவீதமும், 2.98 லட்சம் மூட்டைகள் சர்க்கரை உற்பத்தி செய்தும் சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது தவிர, 13,500 டன் மொலாசஸ் கிடைத்துள்ளது. சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகி ரமேஷ், மற்றும் சர்க்கரை ஆலை அதிகாரிகள், ஊழியர்களுக்கு, கரும்பு விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE