திருச்சி: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை, திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு சூட்ட வேண்டும் என திருவாரூர் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவாரூரில் அண்ணாமலை தலைமையில் தமிழக பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது.அப்போது, கருணாநிதி பெயர் வைத்தால், அரசை இயங்க விட மாட்டோம் என கூறியிருந்தார்.
இது தொடர்பாக அமைச்சர் நேரு கூறியதாவது: திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு கருணாநிதி பெயர் வைக்கும் தீர்மானத்தை நிறுத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதை கூட அறிந்து கொள்ளாமல், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டம் என அரசியல் செய்கிறார். அரசை இயங்க விட மாட்டார்கள் என்றால், பா.ஜ.,வினர் எங்கள் கை கால்களை கட்டிப்போட்டு விடுவார்களா? ஏதாவது ஒரு விவகாரம் கையில் சிக்காதா என்று இவர்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு நபரும் அரசாங்கத்தை நிறுத்தி வைக்க முடியாது. அண்ணாமலை கூறியபடி, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் யார் தடுத்தாலும் அவர்கள் மீது வழக்குப்பாயும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE