சென்னை:தமிழகத்தில், 44வது 'செஸ் ஒலிம்பியாட் - 2022' போட்டிகளை நடத்துவது தொடர்பாக, நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்திய வரலாற்றில் முதன்முறையாக, தமிழகத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டிகள், மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆக., 10 வரை நடக்க உள்ளன. சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டி தொடர்பாக, நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழக அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு இடையே, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.போட்டியில் பங்கேற்க உள்ள, சதுரங்க வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மை செயலர் அபூர்வா பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement