மும்பை:தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பற்றி, சமூக வலைதளத்தில் தரக்குறைவாக விமர்சித்த மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே கைது செய்யப்பட்டார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, மராத்தி மொழி நடிகை கேதகி சிதலே, சமூக வலைதளம் ஒன்றில் வெளியிட்ட பதிவில், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான சரத் பவாரை காட்டமாக விமர்சித்திருந்தார்
அப்பதிவில், 'நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்; உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது' எனக் கூறியிருந்தார். இது, தேசியவாத காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. இது பற்றி கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகையில், 'சரத் பவார் எங்களுக்கு தந்தை போன்றவர். அவரை விமர்சிப்பதை ஒரு நாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. 'ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் துாண்டுதல்படி தான், பவாரை கேதகி சிதலே விமர்சித்துள்ளார். அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.இதையடுத்து, நடிகை கேதகி சிதலே மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE