சென்னை :திருக்குளம், கழிப்பறை தொடர்பான புகார் மனுவை, பார்த்தசாரதி கோவில் நிர்வாகத்தினரிடம், ஹிந்து முன்னணியினர் அளித்தனர்.திருவல்லிக்கேணியில் அமைந்துள்ளது, பார்த்தசாரதி பெருமாள் கோவில். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இக்கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்து இக்கோவில் குளம், பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுகிறது. குளத்தில் உள்ள மீன்கள் இறந்து மிதக்கின்றன. மேலும், குப்பை மற்றும் மதுபாட்டில்களும் குவிந்துள்ளன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட கழிப்பறைக்கு, கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கோவில் மதில் சுவர், மேற்கூரை பகுதிகளில் செடிகள் வளர்ந்துள்ளன.இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினரிடம், ஹிந்து முன்னணியினர் புகார் மனு அளித்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில், போராட்டத்தில் ஈடுபட உள்ளதாவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE