திருப்போரூர் :பெண்ணை மிரட்டி 55 சவரன் பறித்த மென்பொறியாளரை, போலீசாரை கைது செய்தனர்.செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த, செங்கண்மால் பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன், 30; திருவான்மியூரில் உள்ள தனியார் நிறுவன மென்பொறியாளர்.இவருக்கும், அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பெண் ஒருவருக்கும், தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் ஒன்றாக பழகிய நிலையில், இருவரும் தனிமையில் இருந்ததை, தன் மொபைல் போனில் காசிவிஸ்வநாதன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை பெண்ணிடம் காட்டி, 'உன் குடும்பத்தினரிடம் இதை காட்டாமல் இருக்க வேண்டுமானால் பணம் தரவேண்டும்' என மிரட்டியுள்ளார்.பயந்துபோன அந்த பெண், அவ்வப்போது நகை கொடுத்து வந்துள்ளார். பெண்ணிடம் இருந்து 55 சவரன் நகைகளை, காசிவிஸ்வநாதன் பறித்துள்ளார். மேலும், நகை, பணம் கேட்டு மிரட்டியதால், அந்த பெண், கேளம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.கேளம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்கு பதிவு செய்து, காசிவிஸ்வநாதனை கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE