கமுதி--கமுதி அருகே செங்கப்படையைச் சேர்ந்த மனோஜ்குமார் என்பவருக்கும் மதுரையைச் சேர்ந்த கோபிகா என்பவருக்கும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு திருமணம் முடிந்தது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு கோபிகா கணவரின் நண்பருடன் சென்றுள்ளார்.உறவினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கணவருடன் சேர்த்து வைத்தனர்.கடந்த ஏப்ரல் 25ம் தேதி கோபிகா தாயாருடன் மதுரைக்கு சென்றுள்ளார். மதுரையில் இறங்கியவுடன் மீண்டும் கணவரின்நண்பருடன் சென்றுஉள்ளார். மனோஜ்குமார் தனது மனைவியை காணவில்லை என்று மே 7ம் தேதி கமுதி போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் கிராமத்தில் நண்பரின் தரப்பினருக்கும், மனோஜ்குமார் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. கமுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE