ராமேஸ்வரம்,--ராமேஸ்வரத்தில் வீசும் சூறாவளியால் பாம்பன் ரயில் பாலத்தை கடக்க கப்பலுக்கு தடை விதித்ததால், 3 நாட்களாக மாலுமிகள் காத்திருக்கின்றனர்.வங்க கடலில் உருவான புயலால் கடந்த சில நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகம் வரை சூறாவளி காற்று வீசுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சதஅலைகள் எழும்பின. நாட்டுப்படகு மீனவர்கள்மீன்பிடிக்க செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி உள்ளனர்.இந்நிலையில் மும்பையில் இருந்து சென்னை செல்ல மே 12ல் பாம்பன் கடற்கரை வந்த மிதவை கப்பலின் கேப்டன், ரயில் பாலத்தை கடந்து செல்ல பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.ஆனால் நேற்றும் சூறாவளி காற்று வீசியதால்,ரயில் பாலத்தை கடந்து செல்ல கப்பலுக்கு தடை விதித்தனர். இதனால் 3 நாட்களாக பாலத்தை கடந்து செல்ல முடியாமல்கப்பலில் மாலுமிகள் காத்திருக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE