திருப்பூர்:திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் அருகே உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 15 ஆண்டாக இப்பணி நிறைவடையாமல் உள்ளது.ஊத்துக்குளி ரோட்டில் துவங்கும் இப்பாலம், ரயில்வே பாதையைக் கடந்து, புதுராமகிருஷ்ணாபுரம், கட்டபொம்மன் நகர் பகுதியை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.இருப்பினும், பாலம் பணி முடிவடையாமல் முக்கால் வாசி பகுதியைக் கடந்து நிறுத்தப்பட்டது. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பாலம் பயன்பாடின்றி வீணாகிக் கிடக்கிறது.
இது குறித்து நேற்று மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.துணை மேயர் பாலசுப்ரமணியம், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தங்க வேல், கவுன்சிலர்கள் கோவிந்தராஜ், செந்தில்குமார் உடன் சென்றனர். பாலம் பணியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அதிகாரிகள் விளக்கினர்.மேயர் கூறுகையில், 'பாலம் தற்போது பணி நிறுத்தப்பட்டுள்ள இடத்திலிருந்து மண் கொட்டி மேடாக்கி பாலம் கட்டப்படவுள்ளது.மாநகராட்சி தரப்பில் இப்பணிகள் செய்து முடிக்கப்படும். நெடுஞ்சாலைத்துறையினர் 4 மாதத்துக்குள் பாலம் பணியை முடித்து தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது,' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE