பல்லடம்:கழிவுப் பஞ்சு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என, பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:கடந்த மார்ச்சில் துவங்கி, கழிவு பஞ்சு விலை கிலோவுக்கு, 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. பஞ்சு விலை ஏறியதால், கழிவு பஞ்சு விலையும் உயர்ந்துள்ளதாக ஓ.இ., மில் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
கழிவு பஞ்சு விலையை குறைக்க வேண்டும் என, 'ஒஸ்மா' சங்க நிர்வாகிகளிடம் கோரிக்கை விடுத்த பின்னும் விலை உயர்ந்துள்ளது. திருப்பூர் தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று, 'சைமா' சங்கம் பஞ்சு விலையை குறைத்துள்ளது.அதுபோல், கழிவு பஞ்சு விலையை குறைக்க முன்வர வேண்டும். பஞ்சு, நுால், கழிவு பஞ்சு ஆகியவற்றின் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்கவும் வேண்டும். இல்லாவிடில், செப்., மாதம் வரை முழுமையான உற்பத்தி நிறுத்தம் செய்ய ஆலோசிக்கப்படும். திங்கள், செவ்வாய் எனஇரு நாள் வேலை நிறுத்த போராட்டம் முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE