பரமக்குடி--பரமக்குடியில் 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.பரமக்குடி புது நகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ஆதி லட்சுமி நாராயணன், 24. இவர் பரமக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியை தனக்கு பிறந்தநாள் எனக்கூறி ஆசை வார்த்தை கூறி மானபங்கம் செய்துஉள்ளார். மேலும் கோயிலில் வைத்து கட்டாய திருமணம் செய்து கொண்டதாகவும் சிறுமி புகார் அளித்துள்ளார்.பரமக்குடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர்தமிழ்ச்செல்வி வழக்கு பதிந்து, வாலிபரை போக்சோ மற்றும் சிறுமியை திருமணம் செய்த வழக்கில் கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE