வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கேன்ஸ் திரைபட விழாவில் பங்கேற்க முடியவில்லை.
பிரபல பாலிவுட் நடிகர் அக்சய்குமார் 54, உடல் பரிசோதனை செய்ததில், தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு 75-வது கேன்ஸ் திரைப்பட விழா 17ம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா சார்பில் நடிகர், நடிகைகள் குழுவில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் இடம் பெற்றிருந்தார்.
இந்நிலையில், கொரோனா தொற்று உறுதியானதால் அவர் பங்கேற்க முடியவில்லை.![]()
|
இதையடுத்து அக்சய்குமார் கூறியது, மிகவும் எதிர்பார்த்திருந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் என்னால் பங்கேற்க முடியவில்லை .,இது எனக்கு மிகுந்த சோகத்தை தந்துவிட்டது. எனவே இந்தியா சார்பில் பங்கேற்க செல்லும் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement