கோவை:நாராயண குரு கல்லுாரியின், 26வது ஆண்டு விளையாட்டு விழா, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. கல்லுாரியின் செயலாளர் ராஜ்குமார் துவக்கி வைத்தார்.விளையாட்டு தின விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகள், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு மண்டலங்களாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன.
100 மீ., 200மீ., 400மீ., குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகளும், கால்பந்து, வாலிபால், கிரிக்கெட், ஹேண்ட்பால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன. இப்போட்டியில், வடக்கு அணி, 117 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. அதை தொடர்ந்து, தெற்கு மண்டல அணி, 72 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தை பிடித்தது. பெண்கள் பிரிவில் தனிப்பட்ட சாம்பியன் பட்டத்தை, இரண்டாம் ஆண்டு பி.காம் (சி.ஏ.,) மாணவி, சூசன் மேரி பெற்றார். ஆண்கள் பிரிவில் பி.எஸ்.சி., இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மெல்வின் மற்றும் பூபாலகிருஷ்ணன் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE