சிம்லா:மத்தியில் பா.ஜ. ஆட்சி அமைத்ததன் எட்டாவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஹிமாச்சல பிரதேசத்தில் 31ம் தேதி பிரதமர் மோடி சிறப்புரையாற்ற உள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்ததன் எட்டாவது ஆண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பா.ஜ.வினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில் மே 31ம் தேதி அதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. அப்போது சிம்லாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் அந்த கூட்டம் நடைபெற உள்ள இடத்தை முதல்வர் ஜெய்ராம் தாக்குர் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் மாநில பா.ஜ. தலைவர் சுரேஷ் காஷ்யபும் உடன் இருந்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்தியில் ஆட்சியமைத்ததன் எட்டாவது ஆண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட பா.ஜ.வினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
முதல்வர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில் மே 31ம் தேதி அதற்கான கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. அப்போது சிம்லாவில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று சிறப்புரையாற்ற இருக்கிறார். இந்நிலையில் அந்த கூட்டம் நடைபெற உள்ள இடத்தை முதல்வர் ஜெய்ராம் தாக்குர் நேற்று ஆய்வு செய்தார். அவருடன் மாநில பா.ஜ. தலைவர் சுரேஷ் காஷ்யபும் உடன் இருந்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement