நாமக்கல்,-முன்விரோதத்தால் கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.நாமக்கல் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் கார் டிரைவர் பிரபாகரனுக்கும், 29, அவரது நண்பர் சுரேந்தர், 27, என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணிக்கு, செல்லப்பாகாலனியில் உள்ள மாதாகோவில் பின்புறம், பிரபாகரனுக்கும், சுரேந்தருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.தகராறில், மேதர்மாதேவியைச் சேர்ந்த விக்னேஷ், 29, சுரேந்தருக்கு ஆதரவாக பேசினார். ஆத்திரம் அடைந்த பிரபாகரன், விக்னேஷை கத்தியால் குத்தினார். அதில், குடல் சரிந்த மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, பிரபாகரன் அருகில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி கொண்டார். தகவல் அறிந்து அங்கு சென்ற சுரேந்தர் மற்றும் சிலர், பிரபாகரனை வெளியே இழுத்து வந்து, கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தனர்.தகவல் அறிந்த நாமக்கல் போலீஸ் எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று தீவிர விசாரணை நடத்தினார். தொடர்ந்து, கொலை சம்பவம் தொடர்பாக, ஆறு தனிப்படைகளை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், சுரேந்தர் உள்பட, ஐந்து பேரிடம் விசாரணை நடத்தினர். அதையடுத்து, கொலை வழக்கில், சுரேந்தர், அவரது நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, 23, நவீன், 22, ஆகிய, மூன்று பேரை, நேற்று கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE