வேலாயுதம்பாளையம்,---மலைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும் என, இ.கம்யூ., மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.கரூர் அருகே, வேலாயுதம்பாளையத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ஏழாவது ஒன்றிய மாநாடு நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். மலைவீதி கந்தம்பாளையம் முதல் புகழூர் வரை சாலையில் சென்டர் மீடியன் அமைத்து, மின் விளக்கு பொருத்த வேண்டும்; புகழூர் நகராட்சி, வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீரை, பாதாள சாக்கடை அமைத்து கொசுத்தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். மலைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நகராட்சி நிர்வாகம் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். தோட்டக்குறிச்சியிலிருந்து, கந்தம்பாளையம் வரை நுாற்றுக்கணக்கான ஆடுகள் ரோட்டில் குறுக்கும், நெடுக்குமாக மேய்ந்து கொண்டிருக்கிறது. இதனால், ஏராளமான விபத்துகள் நடக்கின்றன. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.நிகழ்ச்சியில், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் ரத்தினம், மாவட்ட துணை செயலாளர் சண்முகம் உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE