சேலம்,-கோவையில் இருந்து டில்லிக்கு, 'பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ்' ரயில் இயக்கப்பட்டது. மாதத்தில் இருமுறை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.சேலம் ரயில்வே கோட்டத்தில் வணிக மேம்பாட்டு பிரிவு சார்பில், வணிக ரீதியில் பல்வேறு சேவைகள் அமல்படுத்தப்படுகின்றன. அதன்படி, கோவையில் இருந்து, டெல்லி படேல் நகர் வரை, 'பார்சல் கார்கோ எக்ஸ்பிரஸ்', நேற்று இயக்கப்பட்டது. முன்னதாக, கோவையில் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.'கண்ணா லாஜிஸ்டிக்ஸ்' எனும் நிறுவனத்துக்கு, ஆறு ஆண்டுக்கு, இந்த, 'பார்சல்' ரயில் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. தொடக்கத்தில், மாதத்துக்கு இருமுறை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. வாஞ்சிபாளையம், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாக்பூர் நிறுத்தங்களில் நின்று செல்லும். இதன்மூலம் சேலம் ரயில்வே கோட்டத்துக்கு மாதம், 54 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும் என, ரயில்வே அலுவலர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE