சேலம்-ஏற்காடு, அடிவாரத்தை சேர்ந்தவர் பிரபாகரன், 33. இவர், கடந்த, 11 இரவு, கொண்டலாம்பட்டி பைபாஸ் அருகே, சிலர் தாக்கியதாக கூறி, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். மறுநாள், அவரிடம் கொண்டலாம்பட்டி போலீசார் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். சந்தேகம் அடைந்து போலீசார் விசாரித்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கடந்த பிப்., 7ல், பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் விடுதிக்கு சென்ற பிரபாகரன், அங்கு மேலாளராக பணிபுரியும், நரசோதிப்பட்டியை சேர்ந்த லட்சுமணனிடம், 'வருவாய் ஆய்வாளர்' எனக்கூறி, அறை எடுத்து தங்கியுள்ளார். அதேபோல், பலமுறை வந்து விடுதியில் தங்கி பணம் கொடுக்காமல் சென்றுள்ளார். ஏப்., 1ல் விடுதிக்கு வந்த அவர், உணவு வாங்க செல்வதாக கூறி, லட்சுமணனின், 'ஸ்கூட்டி'யை வாங்கி சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதுகுறித்து, கடந்த, 12ல், டவுன் போலீசில் லட்சுமணன் புகார் அளித்தார். தற்போது, பிரபாகரன் சிக்கிக்கொண்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.இதையடுத்து, டவுன் போலீசார், நேற்று முன்தினம், பிரபாகரனை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement