மாரண்டஹள்ளி,- தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன்,52; விவசாயி. இவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். காட்டு விலங்குகள் பயிரை சேதப்படுத்தாமல் இருக்க நிலத்தை சுற்றி மின்வேலி, மின்விளக்கு அமைத்துள்ளார். நேற்று முன்தினம் இவரது விவசாய நிலத்திற்கு வந்த, 40 வயதுடைய யானை மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது. பாலக்கோடு வனத்துறையினர் மற்றும் மாரண்டஹள்ளி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்திற்கு மின்வேலி, மின்விளக்கு அமைத்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த விவசாயி சீனிவாசன், நேற்று மாரண்டஹள்ளி போலீசில் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement