அரூர்,-ழைக்காலங்களில் வாணியாறு அணை நிரம்பி, அதிலிருந்து திறந்துவிடப்படும் உபரிநீர், அரூர் வாணியாற்றில் செல்கிறது. அதேபோல், வரட்டாறு தடுப்பணையிலிருந்து வெளியேறும் உபரிநீர் வரட்டாறு வழியாக, அரூர் அம்பேத்கர் நகர் அருகேயுள்ள, வாணியாற்றில் சேர்கிறது. இந்த இரண்டு ஆறுகளும் சேருமிடத்தில் தடுப்பணை கட்டினால், சுற்று வட்டாரத்திலுள்ள பல நூறு ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுவதுடன், அரூர் நகரில் ஆழ்துளை
கிணறுகளின் நீர்மட்டமும் உயரும். எனவே, வாணியாறு, வரட்டாறு இரண்டும் சேருமிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாயிகளும், அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், முதற்கட்டமாக தடுப்பணை கட்டுவது குறித்து பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement