விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில், பொதுமக்களுக்கான சிறப்பு குறைதீர் முகாமில் மின்னணு ரேஷன் கார்டு பெறுவதற்கான மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நடந்த முகாமிற்கு தாசில்தார் இளவரசன் தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார்.
மேலும், ரேஷன் கார்டில் உணவு பொருள் சேர்த்தல், பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்களும் பெறப்பட்டது. மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.வட்ட வழங்கல் அலுவலர் வேலு, மண்டல துணை தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர்கள் சார்லின், தயாநிதி, இளநிலை உதவியாளர் பிரகாஷ், வட்ட பொறியாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement