விருத்தாசலம், : தையல் மிஷின் மெக்கானிக்கை தாக்கிய நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விருத்தாசலம் கஸ்பா காலனியைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 45; ஆலடி சாலையில் தையல் மிஷின் மெக்கானிக் கடை வைத்துள்ளார்.
ராமச்சந்திரன்பேட்டையை சேர்ந்த அகஸ்டின், 28; திலீபன், 26, ஆகியோருக்கும், செந்தில்குமாருக்கும் இடையே கடந்த வாரம் பிரச்னை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு செந்தில்குமார் தனது கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டார். அங்கு வந்த அகஸ்டின், திலீபன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் செந்தில்குமாரை திட்டி, கத்தியால் தாக்கினர்.தகலறிந்து வந்த விருத்தாசலம் போலீசார், படுகாயமடைந்த செந்தில்குமாரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதையறிந்த செந்தில்குமார் உறவினர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள், நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனை முன் திரண்டு, குற்றவாளிகளை கைது செய்யகோரி, போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து அகஸ்டின், திலீபன் மற்றும் ஆதரவாளர்கள் இருவர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE