புதுச்சேரி, : புதுச்சேரிமற்றும் ஏனாமில் மேலும் மூவருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.மாநிலத்தில் கடந்த 11ம் தேதி மொத்தம் 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் 337 பேருக்கு மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் ஒருவருக்கும், ஏனாமில் இருவர் என மொத்தம் மூவருக்கு தொற்று உறுதியானது.
ஏற்கனவே வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மூவர் நேற்று முன்தினம் குணமடைந்தனர்.தற்போது புதுச்சேரியில் 7 பேர், ஏனாமில் 6 பேர் மற்றும் காரைக்காலில் ஒருவர் என மொத்தம் 14 பேர் தொற்று பாதித்து வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் நேற்று முன்தினம் 888 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம், மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 9,65,466 ஆக உயர்ந்துள்ளது.அவர்களில் 7,09,237 பேர் இரு தவணை தடுப்பூசிகளும், 21,994 பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE