பெண்ணாடம் : பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் நான்காம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று முன்தினம் நடந்தது.விழாவையொட்டி, காலை 8:00 மணியளவில் கோ பூஜை, 9:00 மணியளவில் மகாசங்கல்பம், அக்னி பிரதிஷ்டை, மகாலட்சுமி ஹோமம்; பகல் 11:00 மணியளவில் மூலவர் சுவாமி மற்றும் பிரகாரத்தில் உள்ள சுவாமிகளுக்கு
சிறப்பு திருமஞ்சனம், 1:00 மணியளவில் அன்னதானம், மாலை 5:00 மணியளவில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம், மாலை மாற்றுதல், மாலை 6:00 மணியளவில் மகாசங்கல்பம், இரவு 7:00 மணியளவில் திருமாங்கல்யதாரணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE