பெரம்பலுார் : காப்பீடு பெற்றுத் தருவதாக கூறி, ஆன்லைன் மூலம் பண மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
அரியலுாரைச் சேர்ந்த கண்ணுப்பிள்ளை,63, என்பவர், கடந்த 26 ஆண்டுகளாக, இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், இவரது மொபைல் போனுக்கு தொடர்புக் கொண்ட மர்ம நபர் ஒருவர், ஒரு நிறுவனத்தின் பெயரை குறிப்பிட்டு, அதில் வேலை செய்யும் அனைவருக்கும் காப்பீடு செய்ய வேண்டும், என்று கூறி உள்ளார்.
அவர் கூறியதை நம்பிய கண்ணுப்பிள்ளை, அதற்குரிய கமிஷன் தொகையை, அவரது வங்கி கணக்கு எண் மற்றும் போன் பே மூலம், 10 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார்.அதன் பின், அந்த நபரை தொடர்புக் கொள்ள முடியாததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கண்ணுப்பிள்ளை, கடந்த மார்ச் 30ம் தேதி, அரியலுார் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாஹால் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன்,36, என்பவர், கண்ணுப்பிள்ளையிடம் ஆன்லைன் மூலம் பணம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கர்நாடகா சென்ற போலீசார், அவரை கைது செய்து, நேற்று முன்தினம் அரியலுாருக்கு அழைத்து வந்தனர்.
அவரிடமிருந்து, ஒரு லட்சம் ரூபாய், 1.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை, ஆன்லைன் மோசடிக்கு பயன்படுத்திய ஏ.டி.எம்., கார்டுகள், 3 வங்கிக் கணக்கு புத்தகம், 6 செக் புத்தகம், 2 மொபைல் போன்கள், ஒரு கம்ப்யூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement