வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுக்கோட்டை-''தி.மு.க., வெற்றிக்கு உதயநிதி பிரசாரம் முக்கியத்துவமாக அமைந்தது. அதன் அடிப்படையில், அவர் அமைச்சராக வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளேன். முதல்வர் விரைவில் முடிவெடுத்து அறிவிப்பார்,'' என, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.
புதுக்கோட்டையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கூறியதாவது:மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கான அனைத்து பணிகளும் துவங்கி விட்டன. தமிழகத்தில், 26 விளையாட்டு சங்கங்கள் உள்ளன. அனைத்திலுமே முறைகேடுகள் நடப்பதில்லை. நான்கு சங்கங்களில் மட்டும் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வந்துள்ளது.
சங்கங்களின் முறைகேடுகள் விளையாட்டு வீரர்களை தான் பாதிக்கும். தற்போது, அதிகாரிகள், அவர்களுடன் பேச்சு நடத்தி வருகின்றனர்; விரைவில் முடிவு எட்டப்படும்.தமிழகத்தில், 86 பேர் விளையாட்டு பயிற்சியாளர்கள் படிப்பு முடித்து, வேறு வேலைக்கு சென்று விட்டனர். அவர்களை ஒன்றிணைத்து, தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து, மூன்று மாதத்திற்குள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட விளையாட்டு அரங்கிலும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
தேர்தல்களில் தி.மு.க.,வின் வெற்றிக்கு உதயநிதி பிரசாரம் முக்கியத்துவமாக அமைந்தது. அதன் அடிப்படையில், உதயநிதி அமைச்சராக வேண்டும் என, விருப்பம் தெரிவித்துள்ளேன். முதல்வர் விரைவில் முடிவு எடுத்துஅறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE