சிவகாசி : வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளம் அகழாராய்ச்சியில் மீண்டும் யானை தந்தத்தால் ஆன தொங்கட்டான் கிடைத்துள்ளது.விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இதுவரையிலும் தோண்டப்பட்டதில் குழிகளில் சுடுமண்ணால் ஆன முழுமையான பானைகள், பொம்மைகள், அகல் விளக்கு , புகை பிடிப்பான் கருவி, விலங்குகளின் எலும்புகள், டெரகோட்டாவால் ஆன குழந்தைகள் விளையாடும் குவளை கிடைத்தது. 3 நாட்களுக்கு முன் 7 வது குழியில் யானை தந்தத்தால் ஆன அணிகலன் கிடைத்த நிலையில் , நேற்று அதே குழியில் கூடுதலாக ஒரு அடி தோண்டிய போது மீண்டும் யானை தந்தத்தால் ஆன தொங்கட்டான் கிடைத்துள்ளது.அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், '' ஆழம் அதிகரிக்கும் போதும், புதிய குழி தோண்டப்படும் போதும் மேலும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளது,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE