புதுடில்லி : நாட்டின் 75வது சுதந்திர தினம் கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அப்போது டில்லி செங்கோட்டையில் பேசிய பிரதமர் மோடி, 'தொழில் துறையில் உலக அளவில் இந்தியா போட்டியிட உதவும் வகையில், 'பிரதமர் கதி சக்தி' என்ற தேசிய மாஸ்டர் பிளான் திட்டம் நிறைவேற்றப்படும்' என்றார்.இந்த திட்டத்தை கடந்த ஆண்டு அக்., 15ல் பிரதமர் துவக்கி வைத்தார்.
மத்திய அரசின் ரயில்வே, தொலை தொடர்பு உட்பட 16 துறைகள் ஒரே 'டிஜிட்டல் பிளாட்பார்மில்' இணைக்கப்பட்டு, 2025ம் ஆண்டு வரைக்கான உள்கட்டமைப்பு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள இந்த திட்டம் வழிவகுக்கிறது.இந்நிலையில் பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ், உள்கட்டமைப்பு பணிகளை விரைவுபடுத்த, ரயில்வே வாரியம் இயக்குனரகத்தை அமைத்துள்ளது. ஒடிசா மாநிலம் கோர்தா, சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர், கர்நாடக மாநிலம் பெங்களூரு மற்றும் டில்லி ஆகிய இடங்களில் அலுவலகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE