சென்னை: கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அந்நாட்டிற்கு உதவும் வகையில் 40 டன் அரிசி, 137 வகை மருந்துகள், 500 டன் பால்பவுடர் ஆகியவை வழங்கப்படும் எனக்கூறியிருந்தார். இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இலங்கை மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்க 4 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்திருந்தது. இக்குழு, நிவாரண பொருட்கள் பணியை மேற்கொண்டது.
இந்நிலையில், சென்னை துறைமுகத்தில் இருந்து அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. பொருட்கள் ஏற்றப்பட்ட கப்பலை ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். முதல் கட்டமாக ரூ.8.84 கோடி மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்கள் கப்பலில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. 2வது கட்டமாக வரும் 22ம் தேதி அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE