அன்னுார் : ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ஊராட்சி செயலர்களுக்கு ஆன்லைன் தேர்வு நேற்று நடந்தது.காலை 11:00 மணிக்கு துவங்கி மதியம் 1:00 மணி வரை நடந்த தேர்வில், ஊராட்சி நிர்வாகம், கணினி பயிற்சி, இணையவழி மின்ஆளுமை, ஊராட்சி கணக்குகள் குறித்து 100 கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில், நடந்த தேர்வில் 20 ஊராட்சி செயலர்கள் பங்கேற்றனர்.
துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வீராசாமி, ரேணுகா, விஜயலட்சுமி ஆகியோர் மேற்பார்வையாளர்களாக பணியாற்றினர்.ஊராட்சி செயலர்கள் சிலர் கூறுகையில், "இணையதள தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளில் ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி கணக்குகள் குறித்த கேள்விகள் மிக எளிமையாக இருந்தன. மின் ஆளுமை, கணினி பயன்பாடு, இணையவழியில் பதிவேற்றம் செய்வது குறித்த கேள்விகள் சற்று கடினமாக இருந்தன. பொதுவான ஊராட்சி நிர்வாகம் குறித்து அனைத்து கேள்விகளும் அடிப்படையாக எளிமையாக இருந்தன" என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE