புதுடில்லி: தேசிய பங்குச் சந்தையில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணன் ஜாமின் கோரிய மனு நாளை (மே. 20) விசாரணைக்கு வருகிறது.
தேசிய பங்குச் சந்தையின் நிர்வாக இயக்குனராக சித்ரா ராமகிருஷ்ணன் கடந்த 2013 முதல் 2016 வரை, பதவிவகித்த அப்போது, அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, 'செபி' எனப்படும், பங்கு சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு குற்றஞ்சாட்டியது.
முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை தனக்கு ஆலோசகராக நியமித்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாக சித்ரா மீது புகார்கள் எழுந்தன.இந்த வழக்கை சி..பி.., மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ஆனந்த் சுப்பிரமணியனை சி.பி.ஐ., கைது செய்து சிறையில் அடைத்தது.
ஜாமின் கோரி சி.பி.ஐ. ,சிறப்புகோர்ட்டில் சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை கடந்த 12-ம் தேதி விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடிசெய்தார். இதை எதிர்த்து சித்ரா ராமகிருஷ்ணன், டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை வரும் 20-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE