வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஜாஷ்பூர் : சத்தீஸ்கரில், 'மொபைல் போன்' வாயிலாக மனைவிக்கு 'முத்தலாக்' எனப்படும் விவாகரத்து கொடுத்தவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூரில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, ஜார்க்கண்ட் மாநிலத்தின் பாலுமத் கிராமத்தைச் சேர்ந்த இஷ்தியாக் ஆலம் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இதையடுத்து, அந்தப் பெண்ணை கணவரும், மாமனாரும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாய் வீட்டிற்கு சென்ற மனைவிக்கு, இஷ்தியாக் மொபைல் போனில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்துள்ளார்.

அந்தப் பெண் போலீசில் புகார் செய்யவே, விசாரணை நடத்திய போலீசார், இஷ்தியாக் இரண்டாவது திருமணம் செய்துள்ளதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தடை சட்டத்தின் கீழ், முஸ்லிம் பெண்களை முத்தலாக் கூறி விவாகரத்து செய்வோருக்கு, மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE