குருகிராம்: 'மாருதி சுசூகி' நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் திறன் கொண்ட ஆலையை அமைக்க இருப்பதாகவும்; அதற்காக எட்டு ஆண்டுகளில், 18 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது.
![]()
|
சோனிபாட்டில் அமைய இருக்கும் ஆலை, மாருதி நிறுவனத்தின் மூன்றாவது ஆலையாகும். இந்த ஆலை 800 ஏக்கர் பரப்பளவில் அமைகிறது.முதல்கட்டமாக, 11 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாகவும்; ஆண்டுக்கு 2.5 லட்சம் வாகனங்களை தயாரிக்க இருப்பதாகவும் மாருதி தெரிவித்து உள்ளது.
![]()
|
மேலும், முதல் தொகுப்பு வாகனங்கள் 2025ம் ஆண்டில் ஆலையிலிருந்து தயாரிக்கப்பட்டு வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.தற்போது மாருதி சுசூகி நிறுவனம், குஜராத் மற்றும் ஹரியானாவில் உள்ள அதன் இரண்டு ஆலைகளின் வாயிலாக, ஆண்டுக்கு 15.5 லட்சம் வாகனங்களை தயாரித்து வருகிறது. இவ்விரு ஆலைகளும் சேர்ந்து ஓராண்டில் 22 லட்சம் வாகனங்களை தயாரிக்க முடியும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement