ஊத்துக்கோட்டை : தனியார் வீட்டு மனைகளில் வளரும் முட்செடிகள் பாதையை ஒட்டி வளர்ந்துள்ளதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இதில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இதில், சில பகுதிகள் வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. பெரும்பாலான இடங்களில் வீட்டு மனைகள் மட்டும் வாங்கி வைத்துள்ளனர். இதில் செடிகள் வளர்ந்தும், சாலைகளை மறித்தும் உள்ளன.உதாரணத்திற்கு, ரெட்டித் தெருவை ஒட்டி செல்லும் முனீஸ்வரன் கோவில் தெருவில், சாலை மறித்து முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் முட்செடிகள் இருப்பது தெரியாமல் செல்லும் வாகன ஓட்டிகளில் முகத்தை இந்த முட்செடிகள் பதம் பார்க்கின்றன.அதிகாரிகள், பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் ஆய்வு செய்து, இதுபோன்று வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE