வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்தான்புல்: உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் (52 கி.கி.,) தங்கப் பதக்கம் வென்றார்.
துருக்கியில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 12வது சீசன் நடக்கிறது. இதன் 52 கி.கி., எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் நிகாத் ஜரீன், தாய்லாந்தின் ஜூடாமாஸ் ஜிட்பாங் மோதினர். இதில் அபாரமாக விளையாடிய நிகாத் ஜரீன், 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். தெலுங்கானாவை சேர்ந்த நிகாத் ஜரீன் 25, கடந்த 2019ல் தாய்லாந்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலம் வென்றிருந்தார்.

ஐந்தாவது வீராங்கனை:
இதன்மூலம் உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஐந்தாவது இந்திய வீராங்கனையானார் நிகாத் ஜரீன். ஏற்கனவே, மேரி கோம், சரிதா தேவி (2006), லேகா (2006), ஜென்னி (2006) ஆகியோர் உலக சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர். இதில் மேரி கோம், ஆறு முறை (2002, 2005, 2006, 2008, 2010, 2018) தங்கம் வென்றிருந்தார். கடந்த 2019ல் பைனல் வரை சென்ற இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, வெள்ளிப் பதக்கம் வென்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE