வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி : பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க உச்ச நீதிமன்றம் இன்று(மே 19) உத்தரவிட்டது.
கொரோனா ஊரடங்கின் போது பாலியல் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிப்பதால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க உத்தரவிடக்கோரி உச்ச நீநிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், அடையாள மற்றும் இருப்பிட சான்றுகள் இன்றி பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இது தொடர்பாக, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் நீதிமன்றத்தில் பதில் அளிக்கையில், 'தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் அல்லது மாநில சுகாதாரத்துறையை சேர்ந்த அதிகாரிகளிடம் இருந்து பாலியல் தொழிலாளர்கள் சான்றிதழ் பெற்று வந்து, யு.ஐ.டி.ஏ.ஐ.,யில் சமர்ப்பித்தால் அதன் அடிப்படையில், இருப்பிட சான்றிதழ் இன்றி ஆதார் அட்டை வழங்கப்படும்' என, தெரிவித்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ஒவ்வொரு தனி மனிதரும் அவர்கள் செய்கின்ற தொழிலுக்கு அப்பாற்பட்டு கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டியது அவசியம். இந்த அடிப்படையில், பாலியல் தொழிலாளர்களுக்கு இருப்பிட சான்றிதழ் இன்றி ஆதார் அட்டைகளை வழங்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE