புதுடில்லி :“நம் நாட்டில், 30 கோடிக்கும் அதிகமான மக்கள், ஓ.டி.டி., எனப்படும் இணைய வழி பொழுதுபோக்கு தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்,” என, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடான பிரான்சின் கேன்ஸ் நகரில், சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இதில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தியாவுக்கான மாநாட்டில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் பங்கேற்றுப் பேசினார். அதன் விபரம்:
![]()
|
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையில், இந்தியா மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாக, ஓ.டி.டி., சந்தை ஆண்டுதோறும், 21 சதவீதம் வளர்ச்சியை சந்தித்து வரும் நிலையில், 30 கோடிக்கும் அதிகமான மக்கள் இத்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
திரைத்துறையை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்துறையில் அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE