வெண்ணந்துார் டவுன் பஞ்., அருந்ததியர் தெருவைச் சேர்ந்த மணி மனைவி ராணி, இவருக்கு சொந்தமான வீட்டுக்கு வரும் பாதையை, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் ஒரு சிலர், இந்த பாதையை மறித்து, கருங்கற்களை அடுக்கி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரை ஆர்.ஐ., விசாரித்து வருகிறார்.
இந்நிலையில் பாதையை மறித்ததால், கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டித்து, வெண்ணந்துார் அண்ணாசிலை அருகே நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று இரவு தாசில்தார் கார்த்திகேயன், டி.எஸ்.பி., செந்தில்குமார் உள்ளிட்டோர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கற்கள் உடனடியாக அகற்றப்பட்டன. இன்று தாசில்தார் அலுவலகத்தில், பிரச்னை குறித்து பேசி தீர்வு காணலாம் என கூறியதையடுத்து, தொடர் போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE