சென்னை,'இடி, மின்னலுடன், இன்று மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் இயக்குனர் செந்தாமரை கண்ணன் அறிவிப்பு:தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் 25ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.
நாளை, வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், மணிக்கு 45 முதல் 55 கி.மீ., வேகத்திலும், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதி, மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
வடக்கு கேரளா, தெற்கு கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் வீசக்கூடும்.
தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில், 40 முதல் 50 கி.மீ., வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசும். எனவே, மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE