வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இடாநகர்: காங்கிரஸ் எம்.பி., ராகுல் 'இத்தாலிய கண்ணாடியை' கழற்றிவிட்டு, பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்துள்ள வளர்ச்சி பணிகளை பார்க்க வேண்டும் என பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா கூறியுள்ளார்.
அருணாச்சல பிரதேசத்தின், நம்சாய் மாவட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பல வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தும், பல திட்டங்களை துவக்கி வைத்தும் அமித்ஷா பேசியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் என்ன நடந்தது என காங்கிரஸ் தலைவர்கள் கேட்கின்றனர். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு விழித்திருக்கிறார்கள். ராகுல், 'இத்தாலிய கண்ணாடி'யை கழற்றி வைத்துவிட்டு, பிரதமர் மோடி, முதல்வர் பெமா கண்டு செய்துள்ள வளர்ச்சி பணிகளை பார்க்க வேண்டும்.

மாநிலத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சட்டம் ஒழுங்கை பலப்படுத்தவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், 50 ஆண்டுகளில் செய்யாத பணியை கடந்த 8 ஆண்டுகளில் மோடியும், பெமா கண்டுவும் செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE