வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் ஆம் ஆத்மியில் சேர உள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அது வெறும் வதந்தி என கபில் தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், உலக கோப்பையை வென்று தந்த ஜாம்பவான் வீரருமான கபில் தேவ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் சேருவதாக தகவல் வெளியானது. வரும் 29ம் தேதி, ஹரியானாவில் அவர் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார் என சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இதனை கபில் தேவ் மறுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் அரசியல் கட்சியில் இணைவதாக வெளியான செய்தி குறித்து இப்போது தான் அறிந்தேன். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. நான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்பில் இல்லை. மக்கள் தவறான செய்தியை பரப்புவது எனக்கு ஏமாற்றம் அளிக்கிறது. ஒரு வேளை நான் அரசியலுக்கு வந்தால், அதனை பகிரங்கமாக அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE