மழை மேகங்கள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொள்ளும் போது மின்னல் ஏற்படுகிறது. ஈரப்பதம் உள்ள மேகங்கள் காற்றில் உந்தப்பட்டு வேகமாக நகரும் போது, அதில் ஏற்படும் வெப்பத்தால் மேகத்தின் உள் இருக்கும் அணுக்களில் மின்சார சக்தி ஏறுகிறது. அவை ஒன்றுடன் ஒன்று மோதும் போது ஏற்படும் மின் கடத்தலால் மின்னல் உருவாகிறது. இடியும் மின்னலும் ஒருங்கிணைந்த நிகழ்வுகள் என்றாலும் ஒலியைவிட ஒளியின் வேகம் அதிகம் என்பதால் முதலில் மின்னல் நம் கண்களுக்குத் தெரிகிறது. இடிச்சத்தம் அதன்பின் நம் காதுகளை அடைகிறது.
தகவல் சுரங்கம்: உலக ஆமைகள் தினம்
ஆமை இனங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வலியுறுத்தி 2000 முதல் ஆண்டுதோறும் மே 23ல் உலக ஆமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சித்தாமை, அலுங்காமை, பச்சை ஆமை, பெருந்தலை ஆமை உட்பட 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இதன் ஆயுட்காலம் 150 - 300 ஆண்டுகள் வாழும். ஊர்வன இனத்தை சேர்ந்த இவை 50 - 200 முட்டை இடும். கடல் ஆமைகளில் மிகச்சிறியது சித்தாமை. ஆமைகள் மணிக்கு 5.5 கி.மீ., வேகத்தில் செல்வதால் எளிதில் சுறா, திமிங்கலங்களுக்கு இரையாகின்றன. மன்னார் வளைகுடா, வங்கக்கடலில் வாழ்கின்றன.