திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு சத்துமாவு கொழுக்கட்டை, கஞ்சி வழங்கப்படுகிறது.
மாவட்டம்
முழுவதும் உள்ள 2 ஆயிரத்து 35 அங்கன்வாடி மையங்களில் 30
ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர். இங்கு 6 வயது
வரையுள்ள குழந்தைகளுக்கு சத்துணவு, முன் பருவ கல்வி
வழங்கப்படுகிறது. இக்குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து
கிடைப்பதற்காக குறிப்பிட்ட கால இடைவெளியில் சத்துமாவு
வழங்கப்படுகிறது.
சில குழந்தைகள் சத்துமாவை விரும்பி உண்பதில்லை.தற்போது
சத்துமாவில் கொழுக்கட்டை, கஞ்சி தயாரித்து வழங்கப்படுகிறது.
இதில் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலுாட்டும்
தாய்மார்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று சத்துமாவு
வழங்கப்படுகிறது. அங்கன்வாடி மையத்திற்கு வர முடியாத
குழந்தைகளுக்கு பணியாளர்கள் மூலம் வீட்டிற்கே சென்று கொலுக்கட்டை
வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE